பட்டியல்

சமூக மாற்றத்திற்கான வித்தகனின் தனித்துவமான பார்வைகள்.

தியாகிகளின் இரத்தம்: தேசத்தின் விடுதலையா? தேர்தலின் அறுவடையா?

தியாகிகளின் இரத்தம்: தேசத்தின் விடுதலையா? தேர்தலின் அறுவடையா? (கடமை 2: சுதந்திரப் போராட்ட லட்சியங்களைப் போற்றுதல் – ஓர் ஆழமான விமர்சன ஆய்வு) இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் வரலாற்றுப் புத்தகங்களில் முடங்கிப்போன ஒரு அத்தியாயமல்ல. அது ஒவ்வொரு துளி இரத்தத்திலும் தேசிய உணர்வு சுடர்விட்டெரிந்த ஒரு காலகட்டம். பகத்சிங், சந்திரசேகர ஆசாத், அம்பேத்கர், காந்தி, நேரு, பெரியார், காமராஜ், வ.உ.சி., சுப்பிரமணிய பாரதி – இவர்கள் மட்டுமல்ல; பெயரற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், […]

தியாகிகளின் இரத்தம்: தேசத்தின் விடுதலையா? தேர்தலின் அறுவடையா? Read More »

வித்தகன் சிந்தனை – 14

வித்தகன் சிந்தனை – 15 Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “பேசத் தெரிந்தவனை விட, பேசத் துடிப்பவர்களின் மவுனத்தைக் கேட்கத் தெரிந்தவனே சிறந்த கலைஞன்… சிறந்த கணவன்!” –வித்தகன் உலகத்தில் அடுக்குமொழியில் பேசுபவர்களையும், வார்த்தைகளால் வசியப்படுத்துபவர்களையும் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருக்கும் ஒருவரின் மவுனத்தை வாசிக்கத் தெரிந்தவனே உண்மையான மேதை. 1. மவுனத்தின்

வித்தகன் சிந்தனை – 14 Read More »

வித்தகன் சிந்தனை – 13

வித்தகன் சிந்தனை – 13 Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “ஆயுதத்தால் அன்பை வெல்ல முடியாது; ஆனால் அன்பையே ஆயுதமாக்குபவர்களுக்கு முன்னால், அந்த அன்பு செத்துப் போவதுதான் முறை!” –வித்தகன் அன்பு என்பது உலகிலேயே வலிமையான சக்தி. அதை எந்த அடக்குமுறையாலும், ஆயுதங்களாலும் பணிய வைக்க முடியாது. ஆனால், அதே அன்பைத் தவறாகப் பயன்படுத்தும் சில மனிதர்களுக்கு முன்னால் நாம் எடுக்கும்

வித்தகன் சிந்தனை – 13 Read More »

வித்தகன் சிந்தனை – 12

Leave a Comment / வித்தகன் சிந்தனை / By VITHAKAN வித்தகன் Spread the love உள்ளடக்கம் (Content): “சில நேரங்களில் ஒரு பெண்ணின் கோபம் என்பது வெறுப்பல்ல; யாராலும் விவரிக்க முடியாத உடல் வலியும், அதை யாரிடமும் பகிர முடியாத மன வலியும் சேரும்போது பிறக்கும் ஒரு இயலாமை! மருந்துகளை விடவும் அந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம், வலியை உணர்ந்து கொள்ளும் ஒரு மௌனமான அரவணைப்பும், ‘நான் இருக்கிறேன்’ எனும் சிறு ஆறுதலும் தான்!”

வித்தகன் சிந்தனை – 12 Read More »

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு!

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு!   “உன் பெயரை என் உடலில் பச்சை குத்திக் கொள்ள – என் உடல் ஒன்றும் ‘பட்டா’ போட்ட இடமும் அல்ல;  நீ எனக்குத்தான் சொந்தம் என்று முத்திரை குத்த – காதல் ஒன்றும் ‘சொத்துப் பத்திரமும்’ அல்ல!” பச்சை குத்தும் அந்தச் சில நிமிட வலியைத் தாங்குவது காதலல்ல… உடல் சோர்வு, உள்ளச் சோர்வு, நோயுற்ற நொடிகள் என வாழ்க்கை உன்னை முடக்கிப் போடும்போது,  உன் கரம் பிடித்து… உன்னைத்

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு! Read More »

"தோல்வியின் ருசி மற்றும் வெற்றியின் ரகசியம் குறித்த வித்தகன் இதழின் சிறப்புக் கட்டுரை. வாழ்க்கைப் படிக்கட்டுகளில் ஏறும் ஒரு குழந்தையின் போராட்டத்தையும், வெற்றியில் பெற்றோர்களின் பங்கையும் விளக்கும் ஒரு தத்துவார்த்தப் படம்."

தோல்வியின் ருசி: வெற்றியின் ரகசியம்!

“நீ பிறப்பிலேயே ஒரு வெற்றியாளன் தான்!” – ஒரு வித்தகன் அலசல். நண்பர்களே, “நான் இன்னும் ஜெயிக்கவே இல்லை” என்று நீங்களும் கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம். உங்கள் கடந்த காலத்தை நின்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் இதுவரை வெற்றிகரமாகச் செய்த ஒவ்வொரு காரியத்தையும் ஆராய்ந்தால், ஒரு உண்மை புரியும்: நீங்கள் ஒரு தொடர் வெற்றியாளர்! முதல் வெற்றி: அன்னையின் கருவறை உங்களுடைய முதல் வெற்றி எப்போது நிகழ்ந்தது தெரியுமா? நீங்கள் அன்னையின் கருவறையில் கலையாமல், பல்லாயிரம் போராட்டங்களைக் கடந்து

தோல்வியின் ருசி: வெற்றியின் ரகசியம்! Read More »

காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்

கனிந்த கனி

கனிந்த கனி காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்களைப்பின் கனத்தால் மௌனமாய் அமர்கிறாய்“சாப்பிட்டாயா?” “தூங்கலாமா?”இந்த நான்கு சொல்லின் சிறைக்குள்நம் காதலை அடைக்கிறாய்! ஆயிரம் சொல் அள்ளித் தரும் அகராதிஉன் உள்ளத்தில் இருக்கஆருயிர் மனைவியோடு பேசஒரு சொல் கூட இல்லையா? நீ மட்டும் தான் உழைக்கிறாயா அன்பே…நானும் வீட்டினுள் மெழுகாய் தேய்கிறேன்! விலையுயர்ந்த பரிசுகள் கேட்கவில்லைஎதிர்பாரா கணத்தில் தரும் முத்தம் தேடுகிறேன்!சமையலறை வியர்வையில் நான் நினைக்கும்போதுபின்னால் இருந்து செய்யும் சிறு சீண்டல் எதிர்பார்க்கிறேன்! காமமும் காதலும் கலந்த தீண்டலில்என் நாணத்தின்

கனிந்த கனி Read More »

நிரந்தரக் குடியேற்றம்

 நிரந்தரக் குடியேற்றம்

நிரந்தரக் குடியேற்றம் கெஞ்சலில் தொடங்கி… மிஞ்சலில் நிறைந்து…கொஞ்சலில் கனிந்து… ஊடலில் உறைந்து…கூடலில் கலந்து நதியாய்ப் பாய்ந்து,நெஞ்சம் எனும் ஆழிகளில் நித்தம் கலக்கும் காதல்! அது நெஞ்சக்கடலைத் தாண்டியும் சென்றுதஞ்சம் புகுந்திடும் உயிரின் பந்தம்!தற்காலிகத் தங்கும் இடம் அல்ல அது – ஓர்நிரந்தரக் குடியேற்றம்! அன்பும் அதிகாரமும் சரிபாதி கலந்த‘மனைவி’ எனும் அழகிய உறவு அது…காலங்கள் கடந்து கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்தாலும்,காதல் கொண்ட அவன் நெஞ்சில் சுருக்கங்கள் விழுவதில்லை! அவளோ… அன்பின் கருணை வடிவம்!அவனோ… தோழனாய், நண்பனாய், கணவனாய்

 நிரந்தரக் குடியேற்றம் Read More »

 ஆதி நிலா அத்தியாயம் 2: விதியின் நிழல்கள் முதல் நெருப்பின் நிழல் வரை

அந்த அறையில் நிலாவின் மூச்சுக் காற்று பதற்றத்தில் சீரற்று ஒலித்தது. தன் இடது தோளில் இருந்து கசியும் ரத்தத்தையும், ஆதியின் கையில் இருக்கும் அந்தத் தூரிகையையும் அவள் மாறி மாறிப் பார்த்தாள். அந்த வலி அவளது உடலைத் துளைத்ததை விட, அந்த மாயம் அவளது அறிவை உலுக்கியது. “நீங்க… நீங்க மனுஷன் தானா? இல்ல நான் இன்னும் அந்தக் காட்டாற்றுக்குள்ளேயே மயங்கிக் கிடந்து கனவு காண்றேனா?” நிலாவின் குரல் நடுக்கத்தில் தழுதழுத்தது. ஆதிக்குத் தன் செயலைப் பார்த்துத்

 ஆதி நிலா அத்தியாயம் 2: விதியின் நிழல்கள் முதல் நெருப்பின் நிழல் வரை Read More »

நூறு சதவீத வாழ்வு: இருமனப் பந்தம் 💖

இருமனம் இணைந்த இனிய கோலம் இதில் மூன்றாம் மனிதன் முகம் காட்டுவது ஏனோ? இருவர் பேசும் இனிய பொழுதில் இடைப்புகும் எவராயினும்  உயிர் மூச்சுக் காற்றில் விரிசல் தரும் ஒட்டுண்ணி! ஆலோசனை ஊரார்… முடிவு நம்மவர்! பெற்றவர் சொல்லலாம்… சுற்றத்தார் பகிரலாம்… கேட்பது தப்பில்லை  ஆனால் முடிவெடுக்கும் கருவறைக்குள் நீயும் நானும் மட்டுமே இருப்போம்! மறைவு இல்லா மலர்வனம் நம் இல்லறம்!  உலகிற்கு நம்மிடம் ரகசியங்கள் இருக்கலாம்,  நமக்குள்ளே ஒளிவுமறைவு எதற்கு?  உன் இதயம் நான் அறியும்

நூறு சதவீத வாழ்வு: இருமனப் பந்தம் 💖 Read More »