பட்டியல்

சமூக மாற்றத்திற்கான வித்தகனின் தனித்துவமான பார்வைகள்.

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு!

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு!   “உன் பெயரை என் உடலில் பச்சை குத்திக் கொள்ள – என் உடல் ஒன்றும் ‘பட்டா’ போட்ட இடமும் அல்ல;  நீ எனக்குத்தான் சொந்தம் என்று முத்திரை குத்த – காதல் ஒன்றும் ‘சொத்துப் பத்திரமும்’ அல்ல!” பச்சை குத்தும் அந்தச் சில நிமிட வலியைத் தாங்குவது காதலல்ல… உடல் சோர்வு, உள்ளச் சோர்வு, நோயுற்ற நொடிகள் என வாழ்க்கை உன்னை முடக்கிப் போடும்போது,  உன் கரம் பிடித்து… உன்னைத் […]

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு! Read More »

"தோல்வியின் ருசி மற்றும் வெற்றியின் ரகசியம் குறித்த வித்தகன் இதழின் சிறப்புக் கட்டுரை. வாழ்க்கைப் படிக்கட்டுகளில் ஏறும் ஒரு குழந்தையின் போராட்டத்தையும், வெற்றியில் பெற்றோர்களின் பங்கையும் விளக்கும் ஒரு தத்துவார்த்தப் படம்."

தோல்வியின் ருசி: வெற்றியின் ரகசியம்!

“நீ பிறப்பிலேயே ஒரு வெற்றியாளன் தான்!” – ஒரு வித்தகன் அலசல். நண்பர்களே, “நான் இன்னும் ஜெயிக்கவே இல்லை” என்று நீங்களும் கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம். உங்கள் கடந்த காலத்தை நின்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் இதுவரை வெற்றிகரமாகச் செய்த ஒவ்வொரு காரியத்தையும் ஆராய்ந்தால், ஒரு உண்மை புரியும்: நீங்கள் ஒரு தொடர் வெற்றியாளர்! முதல் வெற்றி: அன்னையின் கருவறை உங்களுடைய முதல் வெற்றி எப்போது நிகழ்ந்தது தெரியுமா? நீங்கள் அன்னையின் கருவறையில் கலையாமல், பல்லாயிரம் போராட்டங்களைக் கடந்து

தோல்வியின் ருசி: வெற்றியின் ரகசியம்! Read More »

காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்

கனிந்த கனி

கனிந்த கனி காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்களைப்பின் கனத்தால் மௌனமாய் அமர்கிறாய்“சாப்பிட்டாயா?” “தூங்கலாமா?”இந்த நான்கு சொல்லின் சிறைக்குள்நம் காதலை அடைக்கிறாய்! ஆயிரம் சொல் அள்ளித் தரும் அகராதிஉன் உள்ளத்தில் இருக்கஆருயிர் மனைவியோடு பேசஒரு சொல் கூட இல்லையா? நீ மட்டும் தான் உழைக்கிறாயா அன்பே…நானும் வீட்டினுள் மெழுகாய் தேய்கிறேன்! விலையுயர்ந்த பரிசுகள் கேட்கவில்லைஎதிர்பாரா கணத்தில் தரும் முத்தம் தேடுகிறேன்!சமையலறை வியர்வையில் நான் நினைக்கும்போதுபின்னால் இருந்து செய்யும் சிறு சீண்டல் எதிர்பார்க்கிறேன்! காமமும் காதலும் கலந்த தீண்டலில்என் நாணத்தின்

கனிந்த கனி Read More »

நிரந்தரக் குடியேற்றம்

 நிரந்தரக் குடியேற்றம்

நிரந்தரக் குடியேற்றம் கெஞ்சலில் தொடங்கி… மிஞ்சலில் நிறைந்து…கொஞ்சலில் கனிந்து… ஊடலில் உறைந்து…கூடலில் கலந்து நதியாய்ப் பாய்ந்து,நெஞ்சம் எனும் ஆழிகளில் நித்தம் கலக்கும் காதல்! அது நெஞ்சக்கடலைத் தாண்டியும் சென்றுதஞ்சம் புகுந்திடும் உயிரின் பந்தம்!தற்காலிகத் தங்கும் இடம் அல்ல அது – ஓர்நிரந்தரக் குடியேற்றம்! அன்பும் அதிகாரமும் சரிபாதி கலந்த‘மனைவி’ எனும் அழகிய உறவு அது…காலங்கள் கடந்து கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்தாலும்,காதல் கொண்ட அவன் நெஞ்சில் சுருக்கங்கள் விழுவதில்லை! அவளோ… அன்பின் கருணை வடிவம்!அவனோ… தோழனாய், நண்பனாய், கணவனாய்

 நிரந்தரக் குடியேற்றம் Read More »

 ஆதி நிலா அத்தியாயம் 2: விதியின் நிழல்கள் முதல் நெருப்பின் நிழல் வரை

அந்த அறையில் நிலாவின் மூச்சுக் காற்று பதற்றத்தில் சீரற்று ஒலித்தது. தன் இடது தோளில் இருந்து கசியும் ரத்தத்தையும், ஆதியின் கையில் இருக்கும் அந்தத் தூரிகையையும் அவள் மாறி மாறிப் பார்த்தாள். அந்த வலி அவளது உடலைத் துளைத்ததை விட, அந்த மாயம் அவளது அறிவை உலுக்கியது. “நீங்க… நீங்க மனுஷன் தானா? இல்ல நான் இன்னும் அந்தக் காட்டாற்றுக்குள்ளேயே மயங்கிக் கிடந்து கனவு காண்றேனா?” நிலாவின் குரல் நடுக்கத்தில் தழுதழுத்தது. ஆதிக்குத் தன் செயலைப் பார்த்துத்

 ஆதி நிலா அத்தியாயம் 2: விதியின் நிழல்கள் முதல் நெருப்பின் நிழல் வரை Read More »

நூறு சதவீத வாழ்வு: இருமனப் பந்தம் 💖

இருமனம் இணைந்த இனிய கோலம் இதில் மூன்றாம் மனிதன் முகம் காட்டுவது ஏனோ? இருவர் பேசும் இனிய பொழுதில் இடைப்புகும் எவராயினும்  உயிர் மூச்சுக் காற்றில் விரிசல் தரும் ஒட்டுண்ணி! ஆலோசனை ஊரார்… முடிவு நம்மவர்! பெற்றவர் சொல்லலாம்… சுற்றத்தார் பகிரலாம்… கேட்பது தப்பில்லை  ஆனால் முடிவெடுக்கும் கருவறைக்குள் நீயும் நானும் மட்டுமே இருப்போம்! மறைவு இல்லா மலர்வனம் நம் இல்லறம்!  உலகிற்கு நம்மிடம் ரகசியங்கள் இருக்கலாம்,  நமக்குள்ளே ஒளிவுமறைவு எதற்கு?  உன் இதயம் நான் அறியும்

நூறு சதவீத வாழ்வு: இருமனப் பந்தம் 💖 Read More »

காற்றில் எழுதப்படும் சத்தியங்கள்: இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு

காற்றில் எழுதப்படும் சத்தியங்கள்: இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு

கடவுளின் பெயராலோ அல்லது நேர்மையின் மீதோ எடுக்கப்படும் பிரமாணம் என்பது வெறும் சடங்கல்ல; அது இந்திய ஜனநாயக அரசியலமைப்பின் அடித்தளமான சத்தியத்தின் ஒப்புதல் ஆகும். இது இரண்டு கருத்தை மையப்படுத்துகிறது: பிரமாணம் என்பது ஒரு தேசத்தின் மீதான சத்தியத்தின் சின்னம். இது ஒரு பிரதிநிதியை ஒரு கடமை மனப்பான்மைக்கு பிணைக்கிறது, அங்கு அவர்களது அதிகாரம் மக்களிடமிருந்து “கடனாக” பெறப்பட்டது என்பதும், அதை நியாயமாகவும், அரசியலமைப்புக்குட்பட்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதும் நினைவூட்டப்படுகிறது. வெறும் சொற்கள் அல்ல, இந்திய ஜனநாயகத்தின் உயிர் மற்றும் ஆன்மாவைப் பாதுகாக்கும்

காற்றில் எழுதப்படும் சத்தியங்கள்: இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு Read More »

குற்றம் சுமத்தப்பட்டவர் ‘குற்றவாளி’ அல்ல! – காவல் துறையில் தேவைப்படும் அவசரச் சீர்திருத்தங்கள்!

“சட்டம் என்பது ஒரு கண்ணாடி போன்றது; அதில் ஒரு சிறு விரிசல் விழுந்தாலும், காட்டும் முகம் சிதைந்து போகும். சிறிய சட்டத்தை மதிக்காத சமூகம், பெரிய சட்டத்தை ஒருபோதும் போற்றாது.” “சந்தேகத்தின் பேரில் ஒருவரை விசாரிப்பதற்கும், அவரைத் தண்டிப்பதற்கும் உள்ள இடைவெளிதான் ‘ஜனநாயகம்‘. ஆனால், இன்று நம் காவல் நிலையங்களில் அந்த இடைவெளி இருக்கிறதா?” ஒருவர் மீது புகார் கொடுக்கப்பட்ட உடனேயே, அவரைச் சமூகம் ஒரு குற்றவாளியாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. ஆனால் சட்டம் என்ன சொல்கிறது? “குற்றம்

குற்றம் சுமத்தப்பட்டவர் ‘குற்றவாளி’ அல்ல! – காவல் துறையில் தேவைப்படும் அவசரச் சீர்திருத்தங்கள்! Read More »

ஆதி நிலா

அத்தியாயம் 1: தூரிகையில் உதிர்ந்த ரத்தம் கொடைக்கானல் – நள்ளிரவு 2:00 மணி மழை பெய்து ஓய்ந்திருந்த அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் மரண அமைதி நிலவியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள் நிலா. மூச்சு முட்ட, இதயம் அடித்துக்கொள்ள, அவள் ஒரு மரத்தின் அடியில் சாய்ந்து நின்றாள். மழையில் நனைந்து சேறாகிய மண்ணில் அவளது கால்கள் புதைந்தன. ஒரு காலில் இருந்த சிவப்பு நிற காலணி மட்டும் அந்த இருளில் ஒரு குருதிச் சிவப்பாய்

ஆதி நிலா Read More »

மழலை மாறா மணவாழ்க்கை

மழலை மாறா மணவாழ்க்கை மழலை மாறா மணவாழ்க்கையில்,கணவன்-மனைவி எனும் உறவில்கௌரவம் துறந்து குழந்தையாவோம்!ஓடி ஆடிப் பாடி மகிழ்ந்துஉள்ளம் திறந்தே விளையாடுவோம்! முத்தம் சிந்தத் தோன்றுகிறதா?மெல்ல  மெய்மறந்துஅணைக்கத் துடிக்கிறதா?தடையின்றிச் செய்திடு அக்கணமே —அந்தத் தருணமே வாழ்வின் வரமே! வார்த்தைகள் தீர்ந்த போதெல்லாம்வாடி வருந்தி மௌனம் காக்காதே!பகலில் நடந்த கதைகளையெல்லாம்ஓர் பாசக்கவிதையாய் வாசித்திடு! அவள் பேசிய அரைமணி நேரமும் உந்தன் அன்பைச் செவியால் ஊற்றிடு!பேசப் பேசத் தடைகள் உடையும்,பேரின்பக் கதவுகள் மெல்லத் திறக்கும்! பொருட்கள் உடைந்தால் குழந்தையிரண்டுஅங்கே போரிட்டுப் பிரிந்து நிற்பதில்லை;வெறும்

மழலை மாறா மணவாழ்க்கை Read More »