வித்தகன் கவிதை

துரோகம் செய்யாத தோல்வி!

துரோகம் செய்யாத தோல்வி! உச்சம் தொடும் வெற்றி உனக்கு – ஒருநாள்  எதிரியாய் மாறலாம்! மகுடம் சூட்டும் அந்த மயக்கம் – உந்தன்கண்ணை மறைத்தே கொல்லலாம்! ஆனால்… தோல்வி உனக்குத் துரோகம் செய்யாது! எதிரியாய் நின்று உன்னை வீழ்த்தாது! விழுந்த இடமே உனக்குக் பாடம்… எழுந்து நடப்பதே உனது வேதம்! பூமாலை போடும் கூட்டம் இங்கே – உன்னை போதை ஏற்றிச் சாய்க்கும்! வெற்றி என்னும் போலி வேடம் – உன்னை மெல்ல மெல்ல அழிக்கும்! சுட்டெரிக்கும் […]

துரோகம் செய்யாத தோல்வி! Read More »

ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை…

  ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை… அம்புவிழும் நெஞ்சுக்குள் ஆசைவார்த்தை உளறலானது! நேருக்கு நேராக நெஞ்சத்து விழிகள் மோத… பார்வைக்குத் தோற்றுப்போய் பாதம் பார்த்தேன் திருடன்போல! நேரினிலோர் பெண்ணைக்கண்டு நேசம் பேசுதல் கடினமடா… காரிகையின் தடையுடைத்தால் காதல் என்றும் இனிமையடா! நடையழகை நெடுந்தூரம் நானுமங்கே பின்தொடர… இடையினிலே “நில்”லென்றே என் நாவும் அவசரப்பட… திரும்பிநின்ற திருமகளின் திசைபறந்த கார்கூந்தல், அரும்பயத்தைத் தந்திடும் அய்யனார் அருவாளானது! உதட்டினிலே மூச்சுவிட்டு உறுத்துநின்ற முடிவிலக்க… விதித்ததென்ன? அவ்வுதட்டின் ரேகையென் ஆயுள் ரேகையென!

ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை… Read More »

அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்!

அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்! அவள் பாதங்கள் பதியும் நிலத்தின் கடினத்தை  என் விரல் ரேகைகள் தேய்த்து மென்மையாக்கும்! அவள் புருவம் சுருங்கும் ஒற்றை நொடியில் காரணங்களை  என் பிடிவாதம் தேடி வேரறுக்கும்! அவளை நெருங்கும் வலியின் சிறு அணுக்களைக் கூட  என் மார்புக்கூடு சல்லடையாய்த் தடுத்து நிறுத்தும்! உவர்ப்புச் சுவையுள்ள கண்ணீரை அவள் கண்கள் ஒருபோதும் அறியாது, என் இதழ்களின் தீராத ஆக்கிரமிப்பால் மட்டுமே அங்கு ஈரம் தங்கும்! அந்தத் தடையற்ற முத்தங்களின்

அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்! Read More »

ஆயிரம் வெற்றிகளும் ஒற்றை எதிர்பார்ப்பும்

ஆயிரம் வெற்றிகளும் ஒற்றை எதிர்பார்ப்பும் அழுகையில் பிறந்து, பின் புன்னகையில் மலர்ந்து, மல்லாந்து கிடந்து, தன் கைகால்களை அசைத்து, தானாகவே புரண்டு, மெல்லத் தவழத் தொடங்கி, சுவர் பிடித்து எழுந்து, தத்தித் தத்தி நடந்து… ஒவ்வொரு அடியும் இயற்கையின் உந்துதல்! யாரும் கற்பிக்காமல் கற்ற ஆயிரம் சிறு வெற்றிகள்! விழுந்து, முட்டி மோதி, மீண்டும் தாமாகவே எழுந்து, தன்னம்பிக்கையைத் தானே சுவைக்கும் அற்புதப் பயணம். உணவூட்டி, வெறும் பாதுகாப்பை மட்டுமே வழங்கிவிட்டு, “நானே வளர்த்தேன்” என மார்தட்டும்

ஆயிரம் வெற்றிகளும் ஒற்றை எதிர்பார்ப்பும் Read More »