வித்தகன் சிந்தனை – 04
உள்ளடக்கம் (Content): “கோடிகளில் சொத்து வைத்திருப்பவன் இன்று வேட்பாளர்; தெருக்கோடியில் ஒதுக்கி வைத்திருப்பவன் எப்பொழுதும் வாக்காளர்.” […]
வித்தகன் சிந்தனை – 04 Read More »
உள்ளடக்கம் (Content): “கோடிகளில் சொத்து வைத்திருப்பவன் இன்று வேட்பாளர்; தெருக்கோடியில் ஒதுக்கி வைத்திருப்பவன் எப்பொழுதும் வாக்காளர்.” […]
வித்தகன் சிந்தனை – 04 Read More »
“பிறப்பின் வழியைத் தூற்றுபவன், தான் பிறந்த காரணத்தையே கொச்சைப்படுத்துகிறான். உன் ஆண்மை உன் வார்த்தைகளில் இல்லை, நீ கொடுக்கும் மரியாதையில் இருக்கிறது!”
வித்தகன் சிந்தனை – 03: “பிறப்பின் வழியும்… பேச்சின் பிழையும்…” Read More »
அரசியல்: அதிகாரமல்ல… அது ஓர் அறப்பணி! “அரசியல்” என்ற சொல்லை இன்று பலரும் ஒருவிதத் தயக்கத்துடனேயே பார்க்கிறார்கள். ஆனால், அரசியல் என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் லாபத்திற்கான களம் அல்ல; அது நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும், அடிப்படைத் தேவைகளையும் தீர்மானிக்கும் ஒரு உன்னதமான சக்தி. 1. அரசியல் என்பது ஒரு ‘சேவை’ அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல; ஒரு சமூகத்திற்கு எது தேவையோ, அந்தத் தேவையைச் சரியாகக் கண்டறிந்து, அதை முறையாகச் செய்து கொடுப்பதே
அரசியல்: அதிகாரமல்ல… அது ஓர் அறப்பணி! Read More »
உள்ளடக்கம் (Content): “நீங்கள் விழுந்தவுடன் சுற்றி இருப்பவர்களைப் பார்க்காதீர்கள்; அவர்கள் உங்களை பார்க்கிறார்களா என்று. ஏன் நாம் கீழே விழுந்தோம் என்பதை முதலில் பாருங்கள். சுற்றி இருப்பவர்களால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.” வாழ்க்கைப் பயணத்தில் சறுக்கல்களும், தோல்விகளும் சகஜம். ஆனால், நாம் விழுந்த அடுத்த நொடியே நம் மனம், ‘சுற்றி இருப்பவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைப்பார்கள், அவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்களா?’ என்று பிறருடைய பார்வைக்காக ஏங்குகிறது. இது ஒரு மிகப்பெரிய பலவீனம். பிறருடைய
வித்தகன் சிந்தனை 02: விழுவதும், எழுவதும்! Read More »
உள்ளடக்கம் (Content): “காரணத்தை நேராகச் சொல்லும் ஒருவன், கள்ளத்தனத்தை ஒருபோதும் செய்ய மாட்டான்.” வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் உண்மையைச் சொல்லத் தயங்குகிறோம். ஆனால், ஒரு விஷயத்திற்கான காரணத்தை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி, முகத்திற்கு நேராகச் சொல்லும் துணிச்சல் கொண்டவன், ஒருபோதும் முதுகிற்குப் பின்னால் சதி செய்யமாட்டான். அவனது உள்ளமும் உதடும் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும். கள்ளத்தனம் என்பது இருட்டில் பிறப்பது; உண்மை என்பது வெளிச்சத்தில் வாழ்வது. நேராகப் பேசுபவன் தன் செயல்களுக்குப் பொறுப்பேற்கிறான். தவறு
வித்தகன் சிந்தனை 01: நேர்மையும் துணிவும்! Read More »
காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு! “உன் பெயரை என் உடலில் பச்சை குத்திக் கொள்ள – என் உடல் ஒன்றும் ‘பட்டா’ போட்ட இடமும் அல்ல; நீ எனக்குத்தான் சொந்தம் என்று முத்திரை குத்த – காதல் ஒன்றும் ‘சொத்துப் பத்திரமும்’ அல்ல!” பச்சை குத்தும் அந்தச் சில நிமிட வலியைத் தாங்குவது காதலல்ல… உடல் சோர்வு, உள்ளச் சோர்வு, நோயுற்ற நொடிகள் என வாழ்க்கை உன்னை முடக்கிப் போடும்போது, உன் கரம் பிடித்து… உன்னைத்
காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு! Read More »
“நீ பிறப்பிலேயே ஒரு வெற்றியாளன் தான்!” – ஒரு வித்தகன் அலசல். நண்பர்களே, “நான் இன்னும் ஜெயிக்கவே இல்லை” என்று நீங்களும் கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம். உங்கள் கடந்த காலத்தை நின்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் இதுவரை வெற்றிகரமாகச் செய்த ஒவ்வொரு காரியத்தையும் ஆராய்ந்தால், ஒரு உண்மை புரியும்: நீங்கள் ஒரு தொடர் வெற்றியாளர்! முதல் வெற்றி: அன்னையின் கருவறை உங்களுடைய முதல் வெற்றி எப்போது நிகழ்ந்தது தெரியுமா? நீங்கள் அன்னையின் கருவறையில் கலையாமல், பல்லாயிரம் போராட்டங்களைக் கடந்து
தோல்வியின் ருசி: வெற்றியின் ரகசியம்! Read More »
கனிந்த கனி காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்களைப்பின் கனத்தால் மௌனமாய் அமர்கிறாய்“சாப்பிட்டாயா?” “தூங்கலாமா?”இந்த நான்கு சொல்லின் சிறைக்குள்நம் காதலை அடைக்கிறாய்! ஆயிரம் சொல் அள்ளித் தரும் அகராதிஉன் உள்ளத்தில் இருக்கஆருயிர் மனைவியோடு பேசஒரு சொல் கூட இல்லையா? நீ மட்டும் தான் உழைக்கிறாயா அன்பே…நானும் வீட்டினுள் மெழுகாய் தேய்கிறேன்! விலையுயர்ந்த பரிசுகள் கேட்கவில்லைஎதிர்பாரா கணத்தில் தரும் முத்தம் தேடுகிறேன்!சமையலறை வியர்வையில் நான் நினைக்கும்போதுபின்னால் இருந்து செய்யும் சிறு சீண்டல் எதிர்பார்க்கிறேன்! காமமும் காதலும் கலந்த தீண்டலில்என் நாணத்தின்
நிரந்தரக் குடியேற்றம் கெஞ்சலில் தொடங்கி… மிஞ்சலில் நிறைந்து…கொஞ்சலில் கனிந்து… ஊடலில் உறைந்து…கூடலில் கலந்து நதியாய்ப் பாய்ந்து,நெஞ்சம் எனும் ஆழிகளில் நித்தம் கலக்கும் காதல்! அது நெஞ்சக்கடலைத் தாண்டியும் சென்றுதஞ்சம் புகுந்திடும் உயிரின் பந்தம்!தற்காலிகத் தங்கும் இடம் அல்ல அது – ஓர்நிரந்தரக் குடியேற்றம்! அன்பும் அதிகாரமும் சரிபாதி கலந்த‘மனைவி’ எனும் அழகிய உறவு அது…காலங்கள் கடந்து கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்தாலும்,காதல் கொண்ட அவன் நெஞ்சில் சுருக்கங்கள் விழுவதில்லை! அவளோ… அன்பின் கருணை வடிவம்!அவனோ… தோழனாய், நண்பனாய், கணவனாய்
நிரந்தரக் குடியேற்றம் Read More »
அந்த அறையில் நிலாவின் மூச்சுக் காற்று பதற்றத்தில் சீரற்று ஒலித்தது. தன் இடது தோளில் இருந்து கசியும் ரத்தத்தையும், ஆதியின் கையில் இருக்கும் அந்தத் தூரிகையையும் அவள் மாறி மாறிப் பார்த்தாள். அந்த வலி அவளது உடலைத் துளைத்ததை விட, அந்த மாயம் அவளது அறிவை உலுக்கியது. “நீங்க… நீங்க மனுஷன் தானா? இல்ல நான் இன்னும் அந்தக் காட்டாற்றுக்குள்ளேயே மயங்கிக் கிடந்து கனவு காண்றேனா?” நிலாவின் குரல் நடுக்கத்தில் தழுதழுத்தது. ஆதிக்குத் தன் செயலைப் பார்த்துத்
ஆதி நிலா அத்தியாயம் 2: விதியின் நிழல்கள் முதல் நெருப்பின் நிழல் வரை Read More »